Search This Blog

Sunday, May 30, 2010

Allah Has Mentioned It 90 Times!


Allah Has Mentioned It 90 Times!

1483198861_908819e149

Imam Ahmad said:

"Allah has mentioned patience in the Qur'an in ninety places."

Here, we will list the different contexts in which patience appears.

 

1. Instruction. Patience is enjoined upon believers:

واصبر وما صبرك إلا بالله

"And be patient for your patience is but by Allah…" [an-Nahl 16:127]

واصبر لحكم ربك

" Await in patience the command of your Lord…" [at-tur 52:48].

 

2. That which is opposite to patience is forbidden:

ولا تستعجل لهم

and be in no haste about them (disbelievers) [al-Ahqaf 46:35].

ولا تهنوا ولا تحزنوا

"So lose not heart nor despair…" [Al 'Imran 3:139].

ولا تكن كصاحب الحوت إذ نادى وهو مكظوم

"…and be not like the Companion of the Fish [i.e. Yunus [alayhissalaam] – when he cried out in agony" [al-Qalam 68:48].

 

3.Patience is made a condition of success and prosperity:

يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون

O you who believe, persevere and endure and remain stationed and fear Allah that you may be successful [Al 'Imran 3:200].

 

4. The rewards of those who exercise patience will be doubled:

أولئك يؤتون أجرهم مرتين بما صبروا

"These shall be granted their reward twice, because they are steadfast…" [al-Qasas 28:54].

إنما يوفى الصابرون أجرهم بغير حساب

"…Indeed, the patient will be given their reward without account." [az-Zumar 39:10].

Sulayman ibn Qasim said that

the reward of every deed is known, except for the reward of patience, which will be like heavy rain.

 

5. Patience and Eemaan are prerequisites for leadership in religion:

وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون

"And We made from among them leaders guiding by Our command when they were patient and [when] they were certain of Our signs. " [as-Sajdah 32:24].

 

6.Patience is the way to earn the companionship of Allah:

و اصبروا إن الله مع الصابرين

"…and be patient. Indeed, Allah is with the patient." [al-Anfal 8:46].

Abu Ali ad-Daqqaq said:

"People who have patience are the true winners in this world and the next, because they have the companionship of Allah."

 

 

7. Allah will reward those who have patience with a threefold reward: blessings, mercy and guidance:

وبشر الصابرين

الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون

أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون

"…but give glad tidings to those who patiently persevere – who say, when afflicted with calamity: 'To Allah we belong, and to Him is our return' – they are those on whom [descend] blessings from their Lord, and Mercy and they are the ones that receive guidance" [al-Baqarah 2:155-7].

When people came to offer their condolences to one of the salaf, for some calamity that had befallen him, he said:

"Why should I not practice patience, when Allah has promised those who have patience three rewards, each of which is better than this world and everything in it ?"

 

8.Patience is a means of seeking Allah's help:

واستعينوا بالصبر والصلاة

"And seek assistance through patience and prayer…" [al-Baqarah 2:45].

So whoever has no patience has no help.

 

9.Patience and taqwa are conditions for Allah's help and support:

بلى إن تصبروا وتتقوا ويأتوكم من فورهم هذا يمددكم ربكم بخمسة آلاف من الملائكة مسومين

"Yes, if you remain patient and conscious of Allah and the enemy come upon you [attacking] in rage, your Lord will reinforce you with five thousand angels having marks [of distinction] " [Al 'Imran 3:125].

 

10.Patience and taqwa are a great protection against the cunning of enemies:

وإن تصبروا وتتقوا لا يضركم كيدهم شيئا إن الله بما يعملون محيط

"…And if you are patient and fear Allah , their plot will not harm you at all. Indeed, Allah is encompassing of what they do.…" [Al 'Imran 3:120].

 

11.The angels will salute the people of patience in Jannah:

والملائكة يدخلون عليهم من كل باب

سلام عليكم بما صبرتم فنعم عقبى الدار

"…And the angels will enter upon them from every gate, [saying],"Peace be upon you for what you patiently endured. And excellent is the final home." [ar-Ra'd 13:23-24].

 

12.Allah made it permissible to treat our enemies no worse than they treat us, but He has made it clear that practising patience is better:

وإن عاقبتم فعاقبوا بمثل ما عوقبتم به ولئن صبرتم لهو خير للصابرين

"And if you punish [an enemy, O believers], punish with an equivalent of that with which you were harmed. But if you are patient – it is better for those who are patient." [an-Nahl 16:126].

 

13.Allah made patience and right actions a condition for forgiveness and great reward:

إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير

"Except for those who are patient and do righteous deeds; those will have forgiveness and great reward." [Hud 11:11].

 

14.Allah has made patience a standard of courage and determination in the conduct of one's affairs:

ولمن صبر وغفر إن ذلك لمن عزم الأمور

"And whoever is patient and forgives – indeed, that is of the matters [requiring] determination" [ash-Shura 42:43]

يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور

"[Luqman said:] 'O my son, establish prayer, enjoin what is right, forbid what is wrong, and be patient over what befalls you. Indeed, [all] that is of the matters [requiring] determination." [Luqman 31:17].

 

15. Allah has promised the believers His support and victory, and has said that they deserve this because of their patience:

وتمت كلمة ربك الحسنى على بني إسرائيل بما صبروا

"…And the good word of your Lord was fulfilled for the Children of Israel because of what they had patiently endured.…" [al-A'raf 7:137].

 

16.Allah has made patience a condition of His love:

وكأين من نبي قاتل معه ربيون كثير فما وهنوا لما أصابهم في سبيل الله وما ضعفوا وما استكانوا والله يحب الصابرين

" And how many a prophet [fought and] with him fought many religious scholars. But they never lost assurance due to what afflicted them in the cause of Allah , nor did they weaken or submit. And Allah loves the patient." [Al 'Imran 3:146].

 

17.Allah has made patience a condition of receiving many blessings:

وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون

"But those who had been given knowledge said, "Woe to you! The reward of Allah is better for he who believes and does righteousness. And none are granted it except the patient." [al-Qasas 28:80].

وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم

"But none is granted it except those who are patient, and none is granted it except one having a great portion [of good]." [Fussilat 41:35].

 

18.Allah has mentioned that only those who practise patience and gratitude will benefit from the Signs of Allah:

ألم تر أن الفلك تجري في البحر بنعمة الله ليريكم من آياته إن في ذلك لآيات لكل صبار شكور

"Do you not see that ships sail through the sea by the favor of Allah that He may show you of His signs? Indeed in that are signs for everyone patient and grateful." [Luqman 31:31].

ومن آياته الجوار في البحر كالأعلام

إن يشأ يسكن الريح فيظللن رواكد على ظهره إن في ذلك لآيات لكل صبار شكور

" And of His signs are the ships in the sea, like mountains. If He willed, He could still the wind, and they would remain motionless on its surface. Indeed in that are signs for everyone patient and grateful" [ash-Shura 42:32-33].

 

19.Allah praised Ayyoob [alayhissalaam] for his patience:

إنا وجدناه صابرا نعم العبد إنه أواب

"…Indeed, We found him patient, an excellent servant. Indeed, he was one repeatedly turning back [to Allah]. " [Sad 38:44].

Allah described Ayyub [alayhissalaam] as excellent because of his patience, so the person who fails to exercise patience when it is necessary will be regarded as a failure and a sinner.

 

20.Allah has given a general ruling that whoever does not have faith and does not belong to the people of truth and patience, is in state of loss. This means that the only true winners are people of patience:

و العصر

إن الإنسان لفي خسر

إلا الذين آمنوا و عملوا الصالحات و تواصوا بالحق و تواصوا بالصبر

"By time,Indeed, mankind is in loss,Except for those who have believed and done righteous deeds and advised each other to truth and advised each other to patience   " [al-'Asr 103:1-3]

Commenting on this surah, Imam ash-Shafi'ee said:

"If people thought deeply on this surah, it would provide enough guidance, as man cannot attain perfection without perfecting these two things, his knowledge and his actions, i.e. his faith and right actions. As he is required to perfect himself, so he is required to perfect others, which is joining together in mutual teaching of the truth. The foundation of all this is patience."

 

21.Allah has mentioned that the main characteristic of those who attain salvation is patience and compassion:

ثم كان من الذين آمنوا و تواصوا بالصبر وتواصوا بالمرحمةأولئك أصحاب الميمنة

"And then being among those who believed and advised one another to patience and advised one another to compassion. Those are the companions of the right." [al-Balad 90:18].

 

22.Allah has mentioned patience alongside the pillars of Islam and Eemaan, as He has mentioned it alongside salah:

واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين

"And seek help through patience and prayer, and indeed, it is difficult except for the humbly submissive [to Allah ]…" [al-Baqarah 2:45];

  • alongside righteous actions:

إلا الذين صبروا وعملوا الصالحات أولئك لهم مغفرة وأجر كبير

"Except for those who are patient and do righteous deeds; those will have forgiveness and great reward." [Hud 11:11];

  • alongside gratitude [shukr]:

إن في ذلك لآيات لكل صبار شكور

"…Verily in this are Signs for everyone who patiently perseveres and is grateful" [ash-Shura 42:33];

  • alongside truth:

إلا الذين آمنوا و عملوا الصالحات و تواصوا بالحق و تواصوا بالصبر

"…Except for those who have believed and done righteous deeds and advised each other to truth and advised each other to patience. " [al-'Asr 103:1-3];

  • alongside compassion:

ثم كان من الذين آمنوا و تواصوا بالصبر وتواصوا بالمرحمة

"…And then being among those who believed and advised one another to patience and advised one another to compassion.…" [al-Balad 90:17];

  • alongside faith:

وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون

"…And We made from among them leaders guiding by Our command when they were patient and [when] they were certain of Our signs" [as-Sajdah 32:24];

  • alongside truth:

والصادقين والصادقات والصابرين والصابرات

"…the truthful men and truthful women, the patient men and patient women…" [al-Ahzab 33:35].

Compiled by Ibn al Qayyim rahimahullah

Masjid breakers become Masjid Makers

 



Dear all,


Assalamu alaikkum


Please read this and spread.


http://www.monthlycrescent.com/my-journey-to-islam/mosque-breakers-become-mosque-makers-ii/


Mosque breaker becomes mosque makers

"6th December 1992: Balbir Singh, Vice president Shiv Sena Youth Wing leads the demolition squad and becomes the first person to strike his pickaxe against the central Dome of Babri Masjid. Within minutes the whole structure is razed to ground. 25th June 1993: Balbir Singh takes rebirth as Mohammad Aamir when he embraces Islam (Al-hamdu Lillah) having lived lives and experienced psyches poles apart from each other Mohammad Aamir admonishes the Muslim ummah about their responsibilities and is trying his utmost to awaken them from the slumber they are in. Here is the part II of his story in continuation to part I which appeared in the June issue of CRESCENT.

PRIDE HATH A FALL

My embracing Islam can not be separated from this story of Mohammad Omar (former Yoginder Pal Singh) which is incomplete yet. On 9th March 1993, my father succumbed to cardiac arrest. He was worried about the demolition of the Babri Masjid and my participation in the demolition. He used to ask my mother: "Why hasn't Lord given us birth in some Muslim family. Being Muslim we could have been among the oppressed and not the oppressors". He had advised the family that Balbir shall not attend his funeral. His body shall either be buried or thrown in water and not burned according to the customs of oppressors. He had advised that his body shall not be taken to Hindus crematory. Family members acted as per his will. I came to know about his death eight days later. My heart was broken. After his death the demolition of Babri Masjid seemed to me some gruesome act. I started feeling sorry instead of proud about that. With my heart sunk, whenever I visited my home my mother would cry in memory of my father. She would blame me for hurting the noble soul and subsequent death of my angle like father. Finally I stopped visiting my home.

ENCOUNTER WITH TRUTH

In June 1993, Mohammad Omar (former Yoginder) returned from Jamaat and came to visit me in Panipat. He related to me his story in detail. Since two months I was feeling scared as if something was going to befall me. My father's tragic death and demolition of Babri Masjid were breaking my heart. The story of Mohammad Omar worried me further. Br. Omar insisted that I should see Molvi Kalim Sidiqi who was arriving in Sonipat on 23rd June. I scheduled the trip but was a little late. Br. Omar had reached early and told Molvi Sahib about me. When I reached there Molvi Sahib received me with love and affection and said,  "What ever has happened to Omar (former Yoginder) who sinned at your behest can well be repeated by Almighty Lord with you too. Even if He does not punish anyone in this world the punishment in the eternal life of Hereafter is beyond your imagination". After being with him for an hour I decided that if I have to save myself from some supernatural disaster I have to embrace Islam. Molvi Sahib was leaving for a two days trip. I expressed my desire to be with him during the trip, which was gladly accepted. One day in Haryana, then Delhi followed by Khorja and back to Phulat after two days. After these two days I was ready to embrace Islam. I expressed my desire to Br. Omar and he gladly conveyed the same to Molvi Sahib. On 25th June 1993 after Zuhar prayer I came within the fold of Islam (alhamdulillah). Mohammad Aamir was the name given to me by Molvi Sahib and he suggested me to remain in Phulat to study Islam and learn prayers, etc.

FAMILY WELCOMES MY REVERSION

I expressed my obligations regarding my wife and little child to Molvi Sahib and a house was arranged for me and my family. We continued in Phulat for a few months and constant teaching helped my wife to learn and understand Islam. Thank God she embraced Islam after three months.

When I told my mother about my reversion to Islam she was very happy and said, "Your father's soul will rest in peace by this". She too embraced Islam the same year.

NEW MISSION

Brother Omar and myself decided to rehabilitate the abandoned mosques and construct some new one to somehow counter the evil we had incurred by demolishing the Babri Masjid. For smooth functioning, while co-operating with each other, I took the responsibility of rehabilitating the deserted mosques and Brother Omar took the responsibility of constructing new mosques. We have set a target of rehabilitating one hundred deserted mosques and constructing one hundred new mosques. With the grace of Almighty I (the sinner) have been able to rehabilitate thirteen abandoned and forcibly occupied mosques in Haryana, Punjab, Delhi and Meeruth upto 6th December 2004. Brother Omar is ahead of me. He has constructed twenty mosques and laid the foundation of twenty first (See note at the end). We have further decided that at each anniversary of Babri Masjid demolition on 6th December the regular prayers must be started in one deserted mosque and foundation must be laid for one new mosque. Thank God we have maintained this so far but the target of one hundred is yet far off. This year hopefully the progress is better. We are working on eight mosques and hope to rehabilitate those within a few months. Brother Omar is ahead of me. In fact my work is a part of only his work, for he became the reason to lead me out of darkness.

Now-a-days I am running an English medium junior high school with Islamic Studies as a part of our curriculum. In addition to my mother, my elder brother has also embraced Islam now.

FINALLY THE MESSAGE

My submission to my Muslim brethren is that they should recognize objective of their life and consider Islam as something they owe to humanity. Just being anti-Muslim shall not persuade you for revenge against any one. Based on personal experience I am sure that if all the participants in Babri Masjid demolition whether Shiv Saniks, Bajrang Dal, or any other Hindu know about what Islam is, what a Muslim means, what Quran teaches or what a mosque prepares one for every one of them can think of constructing a mosque. The question of demolition of mosque will not arise.
I am sure if leaders like Bal Thakrey Ji, Vinay Katyar, Oma Bharti or Ashok Singhal will come to know about the spirit of Islam and that Islam is their's too, they will consider themselves fortunate to help reconstruction of Babri Masjid at their expenses.

Some people are notorious for their anti-Muslim attitude and activities but out of one billion Hindus their number will not be even one lac- perhaps one lac is too big a number. The remaining ninety nine crore and ninety nine lac Hindus are just like my father- philanthropists, loving the Islamic principles from the core of their heart. Wasn't my father a Muslim by nature. I consider my self to be a great sinner being the demolisher of Babri Masjid but even worse are the Muslism whose carelessness and indifference caused my dear father to end in hell. Molvi Sahib speaks with sincerity when he says, "You became, the demolishers of Babri Masjid as you didn't know Muslims and Islam. You have sinned unknowingly. But Muslims deliberately promote the cause of leading others to hell". The very idea of my father dying as a rejecter of faith renders my nights sleepless and compels me to resort to sleep inducing drugs.

I wish Muslims feel my pain.

Note : Br. Mohammad Aamir has been kind enough to visit Kashmir along with Allama Kaleem Siddiqui in May 2009. His visit was earlier scheduled last year, but could not materialize. In an interview to Crescent Br. Aamir said that till date 38 new mosques have been constructed by Br. Omar. He and his team have rehabilitated 69 mosques in Haryana, Punjab, Delhi & Meerut. – Editor

This article appeared in July 2009 issue of Monthly Crescent. You can trackback from your own site.
Tagged under: July 2009

Wednesday, May 19, 2010

மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி




மாவீரன் திப்புசுல்தான்:இந்திய விடுதலைப் போரின் உயிர்நாடி

1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.

'கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர் தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தை கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: 'இன்று முதல் இந்தியா நம்முடையது' என்று.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் "ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்" எனக் குறிப்பிடுகிறார்.(. 'Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company' என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)).

1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பலயுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களை துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.

கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர்போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரிய தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர்புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்துக் கொண்டனர். இதில் சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.

ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், '30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்துக் கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது'. என்று குறிப்பிட்டான்.

போரின் துவக்கத்தில் வெற்றிப் பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணந்துக் கொண்டதால் ஒப்பந்தம் செய்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்துவரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடிக் கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாக பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், 'இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்' என்று.

ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம் கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம். "அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா,சரணடைந்து விடலாம்" என்று பதறுகிறான் அவருடைய பணியாள். "முட்டாள்... வாயை மூடு" என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! "ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.

திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி
ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சிப் பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாக திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது 'அக்னி சிறகுகள்' என்ற நூலில் தான் அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.

இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation - DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, 'இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்' என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், 'ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன' என்று கூறியிருந்தார்.

வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை
திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.

இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள் கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச் செய்து வந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால் வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விளைந்தார் திப்புசுல்தான்.

நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்
அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரை கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: "மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?" என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியை தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடைச்செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடைச்செய்தார்.

அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு
'எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது' என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் நாயர் சமூக பெண்களால், சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக அச்சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திர பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி பலர் கன்னியராகவே இறந்தனர்.

வரதட்சணை கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகையக் கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாகத் திப்புக் கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

"உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்."

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.

திப்புவின் மத நல்லிணக்கம்
திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.

திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டுத் தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.

இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது 'திப்புவின் சமயக் கொள்கை' என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வுக் கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் 'திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பிரமாணர்கள் தற்கொலைச் செய்துக் கொண்டனர்' என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி.,ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இதனைக் கண்ணுற்று திடுக்கிட்டு இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்கு காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார் பி.என்.பாண்டே.

திப்புவின் விவசாயக்கொள்கை
"எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்" என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பிராமணர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.

சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக் கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 ஆம் ஆண்டு தோல்விக்கு பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும்பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதில் கவனம் செலுத்தியிருக்கிறார்.

1911 இல் ஆங்கிலேய பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக்கட்ட பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். இந்த அணைநீரை பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.

திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. "விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்" என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


போர்களத்தில் நேர்மை
"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை."

மக்கள் சக்தியை திரட்டியவர்
ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்துக் கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. "அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கிச்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்".என்பதே அந்த ஆணை.

தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.

திப்புவை மாவீரனாக மாற்றியது எது?
இவ்வாறு போர்வீரராக, ஆட்சியாளராக, நிர்வாகியாக, பொருளாதார அறிஞராக, தொழில் நுட்ப வல்லுநராக, சீர்திருத்தவாதியாக, ஒழுக்க சீலராக திகழ்ந்த திப்புசுல்தானின் வாழ்க்கையை பார்க்கும் பொழுது ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் வாழ இயலுமா என்ற கேள்வி நம் மனதில் எழலாம்.
உலக வரலாற்றை மாற்றியமைத்தவர்கள் ஒரு சிலரே. அந்த வரிசையில் திப்பு சுல்தானும் ஒருவர் என நாம் நம்மை சமாதானப்படுத்திவிட முடியாது, அல்லது பொதுவுடைமைவாதிகள் கூறுவது போல் பிரெஞ்சுப்புரட்சியைப்பார்த்தோ, மாறிவரும் உலமைப்புரிந்துக்கொள்ளும் கண்ணோட்டமோ அல்ல திப்புவை வெற்றிகரமான மனிதராக மாற்றியது. அவ்வாறெனில் எந்தக்கொள்கை அவரை மாற்றியது? அதுதான் இஸ்லாம்.


திப்பு மேற்கூறப்பட்டது போன்ற பண்புகளை மட்டுமன்றி அவர் பிரபஞ்சத்தை படைத்த அல்லாஹ் என்ற இறைவனை நம்பிக்கைக் கொண்டிருந்தார். அவர் கொண்டிருந்த இறை நம்பிக்கையும், அவர் படித்த திருக்குர்ஆனும் அவருக்கு தன்னம்பிக்கையை ஊட்டியது. உத்வேகத்தை அளித்தது. நீதியாளராக மாற்றியது.ஒழுக்க சீலராக பரிணமிக்க வைத்தது. கடைசியில் அச்சுறுத்தலுக்கும், ஆசைவார்த்தைகளுக்கும் அடிபணியாத உயிர்தியாகியாகவும் மாற்றியது. ஆகவே திப்புவின் வெற்றிகளுக்கு பின்னணியில் இஸ்லாம் என்ற இறைக்கொள்கைதான் காரணமே தவிர வேறொன்றுமில்லை.

விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல. சஞ்சய்கான் 'the sword of tippu' என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிட்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை 'கற்பனைக்கதை' என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை 'கற்பனை கதை' எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவுக்கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன. அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும்,வறுமை,லஞ்சம்,ஊழல்,நிர்வாக சீர்கேடுகள்,தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும்.அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.



__._,_.___


 

பரிணாம வளர்ச்சி கோட்பாடு- புரியாத புதிர்கள்

 

 

 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj6I8-PtpqHXsrt73uI7t2lyP7AyjGnUGW0IQr5Cd9h7JC-AD4fOFYfVbJEb8obAv6C89geexvJK0JOhpbJ_eVLrg5pVjm3HN1g55L9wVdyokHgskG6Mc9-LkQ1izWsjKp4Qrbd/s1600/Bismillah_2.JPG

 

அஸ்ஸலாமு அலைக்கும், 

 

உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்

 

 

1.   கடவுள் இல்லையென்பதற்கு ஆதாரமாக நாத்திகர்களில் கணிசமானவர்களால்  முன்வைக்கப்படும் ஆதாரங்களில் முக்கியமானது பரிணாம வளர்ச்சி கோட்பாடு (Evolution Theory). இது நிச்சயமாக ஆச்சரியமளிக்கும் ஒன்று. ஏனென்றால், அந்த கோட்பாடு கடவுளை மறுக்கிறதாயென்றால், இல்லை என்று தெள்ளத்தெளிவாக சொல்லுகிறது Talk Origins தளம். நான் ஏற்கனவே என்னுடைய முந்தைய பதிவில் குறிப்பிட்டது போன்று இந்த தளம் பரிமாண வளர்ச்சி கோட்பாட்டை தூக்கிப் பிடிக்கும் பிரபல தளங்களில் ஒன்று. 

 

நீங்கள் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டில் உள்ள குறைகளை சுட்டி காட்டினால், அதை மறுப்பதற்கு நாத்திகர்கள் துணையாகக்கொள்ளும் தளங்களில் ஒன்று. பலரும் இந்த தளத்தின் சுட்டியை கொடுப்பதை பார்க்கலாம்.

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUy3_5dlNYfhQzED-gpI0ro9cJziic8bp33lkaQVFF8cHUptRSPd93C88jumf4pD95ma17l5MV9MxkfACPo7GRMJEeJ-Xo1XFghifxPNhTLsArafg8NkHmcAPoh8XuUhBpY-MG/s400/no+fossil.png

 

 

சரி, விஷயத்திற்கு வருவோம். இந்த தளத்தில் ஒரு கேள்வி, அது: 

பரிணாம வளர்ச்சி கோட்பாடு கடவுளை மறுக்கிறதா? 

Does Evolution deny the existence of God? 

 

இதற்கு என்ன தெரியுமா விடையளிக்கிறது அந்த தளம்?

No. See question 1. There is no reason to believe that God was not a guiding force behind evolution. While it does contradict some specific interpretations of God, especially ones requiring a literal interpretation of Genesis 1, few people have this narrow of a view of God.

There are many people who believe in the existence of God and in evolution. Common descent then describes the process used by God. Until the discovery of a test to separate chance and God this interpretation is a valid one within evolution.  

அதாவது, இந்த தளத்தை பொறுத்தவரை, கடவுள் இல்லை என்றெல்லாம் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டால் கூறமுடியாது அல்லது மறுக்க முடியாது. இன்னும் சொல்லப்போனால், கடவுள் இந்த பரிணாம வளர்ச்சியை பின்னாலிருந்து இயக்குகிறார் என்பதை மறுப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை.

 

கடைசியாய் சொல்லி இருப்பதுதான் இன்னும் சூப்பர். அதாவது, கடவுளையும், எல்லாம் தானாக ஏற்ப்பட்டது (chance) என்பதையும் பிரிக்கும் ஒரு உக்தி கண்டிபிடிக்கப்படும்வரை, கடவுள் இல்லை என்று மறுக்க முடியாது. 

 

அட, நல்லாத்தான் இருக்கு. 

 

இதுமூலமாக நான் அந்த கணிசமான மக்களை கேட்க விரும்புவதெல்லாம், 

  • கடவுளை மறுக்காத ஒரு கோட்பாட்டை கொண்டு வந்து நீங்கள் எப்படி கடவுளை மறுக்கிறீர்கள்? 
  • நீங்கள் குரானையோ அல்லது பைபிளையோ கடவுளின் வார்த்தைகள் இல்லை என்று மறுக்கலாம், வாதிக்கலாம். ஆனால் கடவுளே இல்லை என்று எப்படி சொல்லுவீர்கள்?                      

இந்த தளம், பரிணாம வளர்ச்சியில் நன்கு புலமைப் பெற்றவர்களால் நடத்தப்படுவதாக தெரிகிறது. அவர்கள் சொல்லுகிறார்கள் இப்படி.

 

ஆக, 

  • கடவுள் இல்லையென்பதற்கு இந்த கோட்பாடை உதவிக்கு கொண்டுவருபவர்கள் இந்த கோட்பாட்டைப் பற்றிய அறியாமையில் இருக்கிறார்களா? 
  • அவர்களுக்கு பரிணாம வளர்ச்சி கோட்பாடு பற்றிய தெளிவான புரிதல் இல்லையா? 


புரியாதப் புதிர்தான்...

 

 

2.   அடுத்து, நான் ஏற்கனவே ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களுடைய "The God Delusion" புத்தகத்தை பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டுள்ளேன். மிக பரபரப்பாய் விற்பனையான புத்தகம் அது. அதில், தன் புத்தகத்தின் முக்கிய புள்ளிகள் என்று சிலவற்றை 157-158 பக்கங்களில் குறிப்பிடுகிறார் அவர். அதில் என்னை ஆச்சர்யமூட்டியது பின்வரும் தகவல். 

"We should not give up the hope of a better explanation arising in physics, something as powerful as Darwinism is for biology"

 

அதாவது, அவர் என்ன சொல்லவருகிறாரென்றால், உயிரினங்கள் பூமியில் எப்படி வந்திருக்கும் என்பதை விளக்குவதற்கு பரிணாம வளர்ச்சி கோட்பாடு இருக்கிறது (???), அதுபோல இந்த உலகம் எப்படி வேலை செய்கிறது என்பதற்கு இயற்பியல் ரீதியான விளக்கத்தை கண்டுபிடிப்பதில் நாம் சோர்ந்துவிடக்கூடாது என்பது. 

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgyVvCjbLE7yGf6NJj5yJcTOJNZSn73vI0WaisKXLN5f2nIWfdX5C6GCsu_lhtZK95dXDxTwziTv3Mgni9ga2le__KPMRSKbGXpDw4-vbFFNqNhxjkv3AHMz5peckDX4F1X3izi/s320/dawkins.jpg

 

 

சுருக்கமாக சொல்லப்போனால், இந்த பூமி எப்படி இவ்வளவு perfect ஆக வேலை செய்கிறது என்பதற்கு இயற்பியல் ரீதியாக தெளிவான காரணங்கள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை, அப்படி அது கண்டுபிடிக்கப்பட்டால் இன்னும் அதிகமாக கடவுளை மறுக்கலாம் என்பது.             

             

இதை படித்தவுடன் மிகுந்த ஆச்சர்யம். நான் அவரிடம் (அதுமூலமாக நாத்திகர்களிடமும்) கேட்க விரும்புவது: 

 

"மிஸ்டர் டாகின்ஸ், 

  • இது உங்களுக்கு குருட்டு நம்பிக்கையாக (Blind Faith) தெரியவில்லை?
  • சரியான காரணங்கள் இல்லாமலேயே நீங்கள் கடவுளை மறுக்கிறீர்களா? 
  • உங்களுக்கு ஒரு விஷயம் தெளிவில்லாத போது அதை எப்படி நீங்கள் சரி என்று சொல்ல முடியும்? "       

 

புரியாதப் புதிர்தான்... 

 

அதனால் தான் "டாகின்சுடைய இந்த புத்தகத்தால் ஒரு நாத்திகன் என்ற முறையில் நான் மிகவும் வெட்கப்படுகிறேன்" என்று மைக்கல் ரூஸ் (Michael Ruse) கூறினார் போலும்...

 

"...unlike the new atheists, I take scholarship seriously. I have written that The God Delusion made me ashamed to be an atheist and I meant it. Trying to understand how God could need no cause, Christians claim that God exists necessarily. I have taken the effort to try to understand what that means. Dawkins and company are ignorant of such claims and positively contemptuous of those who even try to understand them, let alone believe them. Thus, like a first-year undergraduate, he can happily go around asking loudly, "What caused God?" as though he had made some momentous philosophical discovery." --- Michael Ruse, Atheist Philosopher of Science. 

 

சும்மா சொல்லக்கூடாது, டாகின்சை நல்லா தான் கேட்டிருக்கிறார் ரூஸ்...

 

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg23N-J4-GkO_69pwzyEdslJbXblaUUfYrXO3KfV0YIHobS6rxi_T3Ij8isumy4xnrbo_-o2qrdnRfBJSmfoVPzc8xL8fsAeeq_UJOlkmKyMImz9cs4fhRZ7lmRqj5t4BhkpaoD/s320/Picture1.png

 

 

டாகின்ஸ் அவர்கள், நமக்கு பதில் சொல்லுவது இருக்கட்டும், ரூஸ் போன்ற அவரது சக தோழர்களுக்கு முதலில் பதில் சொல்லட்டும்...       

 

இதையெல்லாம் விட, டாகின்ஸ், முடிவாக ஒரு பஞ்ச் வைத்திருக்கிறார் பாருங்கள்....

 

God Almost Certainly Does not Exist. 

கடவுள் ஏறக்குறைய நிச்சயமாக இல்லை

 

அடடா, கடவுள் இல்லை என்று உறுதியாக சொல்லாமல் ஏன் இப்படி மழுப்பலாக சொல்லியிருப்பார்?, ஒரு வேலை கடவுள் இருந்திட்டா என்ன பண்றது என்ற ஒரு safetyக்காக இருக்குமோ?.

என்னவென்று சொல்வது, இதைத் தான் தெளிவாக குழப்புவது என்று சொல்லுவார்களோ?  

 

புரியாதப் புதிர்தான்.   

 

 

இன்ஷா அல்லாஹ், இறைவன் நாடினால் மேலும் பல புரியாதப் புதிர்களை எதிர்காலத்தில் எடுத்து வைக்க முயல்வோம். 

 

ஆக இந்த பதிவின் மூலம், நான் என் நாத்திக சகோதரர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம்:

 

  • உங்களால், பரிணாம வளர்ச்சி கோட்பாட்டின் (அது உண்மையாக இருந்தாலும் கூட) மூலம் கடவுள் இல்லையென்று நிரூபிக்க முடியாது. அல்லது டாகின்ஸ் சொன்னது போன்று இயற்பியல் ரீதியாகவும் கடவுளை மறுப்பதற்கு இன்னும் சரியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. ஆக, அறிவியல் ரீதியாக உங்களால் கடவுளை மறுக்கமுடியாது.
  • "கடவுள் இருந்தால் உலகில் அநியாயம் நடக்குமா?" என்பது போன்ற கேள்விகள் உளவியல்  (Psychological Question) ரீதியான கேள்விகள் தானே தவிர, அறிவியல் ரீதியாக இந்த கேள்விகள் ஒத்து வராது. இது போன்ற கேள்விகள் "கெட்ட கடவுள்" என்று சொல்லத்தான் வழி வகுக்குமே தவிர, கடவுள் இல்லை என்று மறுப்பதற்கு எந்த விதத்திலும் பயன்படாது.            

 

ஆக, கடவுளை மறுப்பதற்கு உங்களிடம் எந்த ஒரு தெளிவான ஆதாரமும் கிடையாது. அதே சமயம், ஒரு வேலை கடவுள் இருக்கலாமோ என்று ஒரு சதவிதம் சந்தேகம் வந்தாலும் அதைப் பற்றி ஆராய்வது தான் சிந்திப்பவர்களின் செயல். சொல்லவேண்டியது எங்கள் கடமை. மேற்கொண்டு ஆராய்வது உங்கள் கடமை/இஷ்டம். 

 

"நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளை பரவ விட்டிருப்பதிலும், காற்றுக்களை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும் பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் - சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன" --- குர்ஆன் 2:164.                       

   

இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் நிலைக்கச் செய்வானாக...ஆமின்.

 

அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்...

 

 

First Picture Taken from:

1. Atlas of Creation, First Volume - Page No.20.

 

My Sincere Thanks To:

1. Br.Hamza Andreas Tzortzis.

2. Br.Michael Ruse. 

 

References:

1. Talk Origins Website - talkoriginsdotorg. 

2. "The God Delusion" - Richard Dawkins, page number 157-158.

 

 

உங்கள் சகோதரன்,

ஆஷிக் அஹ்மத் அ 

aashiq.ahamed.14@gmail.com

Sunday, May 16, 2010

குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்



 

குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்

 

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் 

 குர்ஆன் கூறும் கால்நடைகளும் பால் உற்பத்தியும்

 நிச்சயமாக உங்களுக்கு (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) கால்நடைகளிலும் (தக்க) படிப்பினை இருக்கின்றது, அவற்றின் வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்தத்திற்கும் இடையிலிருந்து கலப்பற்ற பாலை அருந்துபவர்களுக்கு இனிமையானதாக (தாராளமாகப்) புகட்டுகிறோம். அல்குர்ஆன் 16:66

 

இந்த இறைவசனத்தின் முதல் பகுதியில் கால்நடைகளிடம் தக்க படிப்பினை உள்ளதாக அல்லாஹ் கூறுகிறான். இங்கு படிப்பினை என்பதை ஆராச்சி என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள அல்லாஹ் ஐந்து விஷயங்களை  (குளு) முன்வைக்கிறான் அவைகளாவன.

 

1)      கால்நடைகளின் வயிற்றுப்பகுதி

2)      வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்

3)      கலப்பற்ற பால்

4)      அருந்துபவர்களுக்கு இனிமை

5)      தாராளமாக புகட்டுகிறோம்

 

மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் முதல் இரண்டை பார்ப்போமா? 

1.  கால்நடைகளின் வயிற்றுப்பகுதி

2.  வயிற்றிலுள்ள சாணத்திற்கும், இரத்ததிற்கும் இடையில்

 

பொதுவாக உயிரினங்களுக்கு வயிற்றுப்பகுதி என்ற அமைப்பு இருக்கும் இங்குதான் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகி அந்த செரிமானமாகிய உணவு புரதச்சத்தாக மாறி இரத்தத்தில் கலநது நமக்கு உடல் வலிமையைத் தருகிறது ஆனால் இந்த வயிற்றுப்பகுதி ஒருசில கால்நடைகளுக்கு அதாவது பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகியவற்றிற்கு மட்டும் தனியாக அமைந்து அவை மனிதனுக்கு பயன்படும் வகையில் அமைந்துள்ளது. உதாரணமாக பசுமாட்டை இங்கு ஆராய்வோம்.

பசுமாடும் அதன் வயிற்றுப் பகுதியும்

பசுமாடுகள், ஆடுகள், ஒட்டகங்கள் மற்றும் மான்கள் ஆகிய கால்நடைகளுக்கு அதன் வயிறுப்பகுதி நான்கு தனித்தனி அறைகளாக அமைந்துள்ளன அவைகளாவன

  1. RETICULUM (ரெடிகுழம்)
  2. RUMEN,   (ரூமென்)
  3. OMASUM,  (ஓமசம்)
  4. ABOMASUM (அபோமசம்)

இங்கு குறிபிடத்தக்க அம்சம் என்னவெனில் மேற்கண்ட கால்நடைகளுக்கு மட்டுமே அமைந்துள்ள இந்த 4 அடுக்கு பகுதிகள் பன்றி முதலான மற்ற மிருகங்களுக்கு கிடையாது என்பதே!.

பசுமாடும் அதன் உணவு உட்கொள்ளும் முறையும்

பசுமாடு புல்வகைகளை உணவாக விழுங்குகிறது அந்த விழுங்கிய உணவு நேரடியாக ரூமென் மற்றும் ரெடிகுழம் பகுதிக்கு சென்று சேமிக்கப்படுகிறது பிறகு பசுமாட்டிற்கு உண்ட கலைப்பு ஏற்பட்டு அமைதியாக அமர்ந்து விடுகிறது.

சேமிக்கப்பட்ட உணவை ரெடிகுழம் என்ற பகுதி அதன் மற்ற இரு பாகங்களான RUMEN, (ரூமென்) OMASUM,  (ஓமசம்) என்ற பகுதிகளுக்குள் தள்ளிவிடுகிறது.

 

அமைதியாக அமர்ந்திருக்கும் பசுமாட்டிற்கு மீண்டும் உணவுப் பசி எடுக்க ஆரம்பிக்கிறது உடனே புல்வெளியை நாடிச் செல்லாமல் தான் வயிற்றில் சேமித்து வைத்த உணவு மீண்டும் வாய்ப் பகுதிக்கு இழுத்து பசுமாடு அசை போட ஆரம்பிக்கிறது. இந்த இயக்கத்திற்கு ரெடிகுழம் பயன்படுகிறது இதன் மூலம் முதல் முறையாக உட்கொண்ட உணவு மீண்டும் பசுமாட்டின் வாய் பகுதிக்கு செலுத்தப்பட்டு நன்றாக மீண்டும் ஒருமுறை அசை போட முடிகிறது.

 

பசுமாடு உட்கொண்ட உணவை சுத்திகரிக்கும் முறை

பசுமாடு மறுசுழற்சி முறையில் அசைபோட்ட உணவை அதன் வயிற்றுப்பகுதியான ரூமென் என்ற அறைக்குள் தள்ளப்படுகிறது இங்கு பல மில்லியன் மைக்ரோப்ஸ்-கள் அடங்கியுள்ளன இந்த மைக்ரோப்ஸ்கள் அசைபோட்டு நான்றாக அரைத்த உணவில் செரிமானம் செய்ய முடியாத கடினமான பகுதியை கூட மிக எளிதாக செரிமானம் செய்ய பயன்படுகிறது.

 

பிறகு செரிமானம் ஆன உணவு ஓமசம் என்ற அறைக்கு சென்றடைகிறது. இந்த ஓமசம் பகுதியைப் பற்றி அறிவியல் உலகம் முழுவதுமாக இன்னும் ஆராய்ந்து முடிக்கவில்லை எனினும் தோராயமாக ஆராய்ந்து பார்த்ததில் உட்கொண்ட உணவை சிறு சிறு துகள்களாக ஒரே சீராக மாற்ற இந்த பகுதி பயன்படுகிறது என்று நம்பப்படுகிறது.

 

செரிக்கப்பட்ட உணவு இரத்தித்தில் எவ்வாறு கலக்கிறது!

 

பசுமாட்டின் வயிற்றிலுள்ள இறுதிப் பகுதியான அபோமசம் என்பது மற்ற பிராணிகளின் வயிறுகளை ஒத்து அமைந்துள்ளது. இந்த பகுதியில் அமைந்துள்ள ஹைட்ரோகுளோரிக் திரவம் ரூமென் பகுதில் செரிமானத்திற்கு பயன்படுகின்ற மைக்ரோப்ஸ்களை அபோமசம் அறைக்குள் நுழையாமல் தடுப்பதற்கும் அவ்வாறு நுழையும்பட்சத்தில் அவைகளை அழிக்கவும் பயன்படுகிறது.

 

மேலும் இந்த அபோமசம் பகுதியில் சேகரிக்கப்பட்ட அசைபோட்ட உணவுகள் சிறுகுடல் பகுதிக்கு அனுப்பப்பட்டு அங்குள்ள மைக்ரோபியல் எனப்படும் செல் கட்டமைப்புகளால் முழுவதுமாக ஜீரணமான செய்யப்படுகிறது. புரதச் சத்துக்களான அமினோ ஆசிட் மற்றும் விட்டமின்கள் உருவாக இந்த பகுதியே பயன்படுகிறது. பிறகு முழுவதும் ஜீரணமான உணவு நேரடியாக இரத்தில் கலந்துவிடுகிறது!

 

இரத்தத்திலிருந்து எவ்வாறு பால் உற்பத்தியாகிறது?

பசுமாடுகளின் உடலில் உள்ள செல்கள் இரத்தத்திலிருந்து நீரையும் ஊட்டச் சத்துக்களையும் அகற்றி அகற்றப்பட்ட அந்த நீரையும் ஊட்டச்சத்தையும் பாலாக மாற்றுகிறது. இந்த பால் பசுமாடுகளின் மடிகளின் வாயிலாக வெளியேறுகிறது.  அதைத்தான் நாம் இனிமையாக பருகுகிறோம்.

 

மேற்கண்ட ஐந்து ஆராய்ச்சிகளில் இறுதியான மூன்றை பகுதியை பார்ப்போமா?

 

3.    கலப்பற்ற பால்

4.   அருந்துபவர்களுக்கு இனிமை

5.    தாராளமாக புகட்டுகிறோம்

கலப்பற்ற பால்

  • ஒரு மனிதனுக்கு ஊட்டச்சத்துக்களில் புரோட்டீன், கால்சியம் ஆகியவை இன்றியமையாமையாதவையாக உள்ளன. இவைகள் பசும் பாலில் அதிகமாக காணப்படுகின்றது. கால்சியம் எலும்பு நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.

 

  • பசும்பாலில் விட்டமின் ஏ, பி12, தையாமின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.

 

  • பசும்பாலில் தயாரிக்கப்படும் வெண்ணெய், நெய் போன்றவைகளில் கால்சியம் உள்ளதால் இது மனிதனின் தற்காப்பு சிஸ்டம் அதாவது IMMUNE SYSTEM-ஐ மேம்படுத்துகிறது.

 

  • உறங்குவதற்கு முன் 1 கிளாஸ் பால் அருந்திவிட்டால் அழகிய தூக்கம் கூட வருகிறதாம்.

 

அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கலப்பற்ற பால் என்று கூறுவதன் மூலம் அந்த பாலில் எப்படிப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன என்பதை சிந்திக்க வலியுறுத்துகிறான் ஆனால் மனிதன் அந்த பாலில் தண்ணீரை ஊற்றி கலப்படம் செய்து விற்கிறான். இஸ்லாம் கலப்படத்தை வண்மையாக கண்டிக்கிறது!

பால் பற்றி கூறும்போது அல்லாஹ் அதை அருந்துபவருக்கு இனிமை என்று வர்ணிக்கிறான் மேற்படி ஆய்வுகளை பார்த்தால் பால் எவருக்குத்தான் கசக்கும்.

 

தாராளமாக புகட்டுகிறோம்

இங்கு அல்லாஹ் பால் பற்றி குறிப்பிடும் போது இறுதியாக தாராளமாக புகட்டுகிறோம் என்று கூறுகிறான் காரணம் அவன் படைத்த ரப்புல் ஆலமீன் அவன் கூறுவது எப்போதும் பொய் ஆகாது என்று இந்த கருத்தின் மூலம் நாம் அறிய வேண்டும். 

 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று ஒரு பழமொழி உள்ளது அந்த பழமொழியின் அடிப்படையில் இந்த வார்த்தை உண்மை என்பதை நிருபிக்க இந்தியா நாட்டின் பால் உற்பத்தியை அளவுகோளாக பயன்படுத்தி பார்ப்போமா?

இந்தியாவின் பால் உற்பத்தி

ஆண்டு

பால் உற்பத்தி

மக்கள் தொகை

1968

21 மில்லியன் டன்கள்

குறைவு

2001

81 மில்லியன் டன்கள்

அதிகம்

 

மக்கள் தொகை பெருக பெருக பாலின் உற்பத்தியும் பெருகி வருகிறது மாறாக பாலின் உற்பத்தி குறைந்தபாடில்லை. இந்தியாவிற்கு அடுத்தபடியாக அமெரிக்க நாடு ஆண்டுக்கு சராசரியாக 71 மில்லியன் டன்கள் பால் உற்பத்தியை மேற்கொள்கிறது.

 

பாலின் உற்பத்தியை 1998ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி உலக நாடுகள் முழுவதையும் கணக்கிட்டுப் பார்த்தால் ஆண்டுக்கு சராசரியாக 557 மில்லியன் டன்கள் குறைவில்லாமல் பால் உற்பத்தியாகிறது.

சிந்தித்துப்பாருங்கள்

அல்லாஹ்வின் கருணையினால் பால் என்ற இனிமையான பானத்தை நாம் குடிக்கிறோம் ஆனால் இந்த பாலை குடித்துவிட்டு கருணையாளன் அல்லாஹ்வை இணைவைத்து ஒரு சாராரும், அல்லாஹ்வைத் தவிர்த்து பிற வஸ்துக்களை ஒரு சாராரும் வணங்கி வருகிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அல்லாஹ் கோபப்பட்டு பசுமாடுகள் உட்பட பால் கொடுக்கும் கால்நடைகளின் வயிறுகளில் பால் சுரக்காமல் இருக்க கட்டளையிட்டுவிட்டால் நிலைமை என்னவாகும் என்பதை ஒருகனம் சிந்தித்தப்பாருங்கள்! ஆனால் ரஹ்மத்துல் ஆலமீன் மக்கள் மீது கருணையுள்ளம் கொண்டவனாக இருக்கிறான் அதனால்தான் மனிதனை விட்டுப்பிடிக்கிறான். அவன் பிடியிலிருந்து தப்பிக்க எவருக்கேனும் வலிமை உள்ளதா?

 

சிந்திப்பீர்! செல்படுவீர்!

 மறுமை வெற்றிக்காக இணைவைப்பை தவிர்த்திடுங்கள்

அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபடும் மூமின்களாக இறைவிசுவாசிகளாக மாறிவிடுங்கள்!

 

அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழி காட்டுவானாக!

 

குறிப்பு

பால் பற்றிய ஆராய்ச்சிக்கு உதவிய பல்வேறு இணைய தளங்களுக்கு நன்றிகள் பல!

 

இந்த கட்டுரையை வரைய அறிவைக் கொடுத்து நேரத்தை ஒதுக்கிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! அல்ஹம்துலில்லாஹ்


--
ஸுப்ஹான(க்)கல்லாஹும்ம வபி(இ) ஹம்தி(க்)க அஷ்ஹது அல்லாயிலாஹா இல்லா அன்(த்)த அஸ்தக்பி(ய)ரு(க்)க வஅதூபு(இ) இலை(க்)க. திர்மீதி 3355

--

Six C's of Character - Yasir Fazaga